இலங்கை பிரதான செய்திகள்

நகைகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து போதைப்பொருள் மீட்பு!

 

யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர்  இளவாலைகாவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு வைத்ததாக காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகிறது.. இதன்போது அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.