Home இலங்கை ஓமானுக்கு ஆட்கடத்தல் – பிரதான சந்தேக நபா் கைது

ஓமானுக்கு ஆட்கடத்தல் – பிரதான சந்தேக நபா் கைது

by admin

வேலைவாயப்பு பெற்றுத் தருவதாக  கூறி சுற்றுலா விசாவில்  இலங்கையில் இருந்து பெண்களை  அழைத்து ​சென்று ஓமானில்  மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரதான  சந்தேக நபரான பெண்  இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபா் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் நடத்தப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்ற நிலையில்  , ​​இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தம்புள்ளையை வசிப்பிடமாகக் கொண்ட ஆஷா திஸாநாயக்க எனும் அவரை கைது செய்வதற்கான  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்ட  நிலையில்  கடந்த சில காலமாக தலைமறைவாகி இருந்த அவா் , இன்று காலை ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இரண்டு சட்டத்தரணிகளுடன் சரணடைந்துள்ளார்.  தற்போது அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More