Home இலங்கை IMF இன் ஆதரவைப் பெறுவது சில சமயம் விரும்பத்தகாததாக இருக்கலாம்

IMF இன் ஆதரவைப் பெறுவது சில சமயம் விரும்பத்தகாததாக இருக்கலாம்

by admin

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கலாம் என  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்பதனால்  அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்

இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

மேலும் , இலங்கையில் செயற்படுத்தப்பட்ட மானியத் திட்டத்திற்கு அதிகப் பணம் செலவழித்தமையானது  வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மேலும் அதிகரித்தமைக்கும்     இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வளர்ச்சிக்கும்  ஒரு காரணமாக அமைந்தது எனவும்  இந்திரஜித் குமாரசுவாமி  தெரிவித்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More