பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரா் – மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோா் கடுவெல நீதவான் சாமிகா விஜேபண்டாரவினால் இன்று (06) தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டதாக தொிவித்து இருவருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment