Home இலங்கை வியட்நாமில் உயிர்மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்

வியட்நாமில் உயிர்மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்

by admin
வியட்நாமில் உயிரை மாய்ந்த்துக்கொண்ட  சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.  அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்திருந்தனர்.

அதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்டநாட்களிக் பின்னர் இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.  அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தி இறுதி கிரிகைகள் நடைபெற்று , சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More