Home இந்தியா மோடியின் தாயார் ஹீராபென் 100ஆவது வயதில் மரணம்!

மோடியின் தாயார் ஹீராபென் 100ஆவது வயதில் மரணம்!

by admin

இந்திய பிரதமர் நரேந்திர  மர உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (30.12.22) உயிரிழந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் காந்தி நகருக்கு பிரதமர் மோடி சென்று தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தாயார் ஹீராபென் உடலை சுமந்தபடி சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன. இந்நிலையளில், இந்திய பிரதமர் மோடியின் தாயாரின் மறைவை அடுத்து சர்வதேச நாடுகளில் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள், கலைத்துறையினர் என பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன். 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More