Home இலங்கை கந்தசாமி பன்னீர்ச்செல்வம், மணற்காட்டில் சடலமாக மீட்பு!

கந்தசாமி பன்னீர்ச்செல்வம், மணற்காட்டில் சடலமாக மீட்பு!

by admin

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த 56 வயதுடைய கந்தசாமி பன்னீர்ச்செல்வம் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் துர்நாற்றம் வீசியதாகவும், கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவற்துறையினர்   மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால், தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More