Home இலங்கை கொழும்பு பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

கொழும்பு பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

by admin

கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர்  கொழும்பு குதிரைப்பந்தயத் திடலுக்கு அருகே  வைத்து  கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளாா். கொலையுடன் தொடர்புடையதாக  சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 உயிரிழந்தவா், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வு பிரிவில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் ஹோமாகமவை சேர்ந்த 24 வயதான  சத்துரி ஹங்சிகா மல்லிகாராச்சி  எனத் தொிவிக்கப்பட்டள்ளது.

இன்று நண்பகல் 12 மணியளவில் குறித்த யுவதி தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினா் தொிவித்துள்ளனா். கொலையாளியாக சந்தேகிக்கப்படும்   இளைஞனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் கற்கும் மாணவர் எனவும் இருவரும் காதலர்கள் எனவும்  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். சந்தேகநபா் குதிரைப்பந்தய திடலுக்கு அருகில் ஓடும் காட்சி   சீசீாிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

நுகேகொடை அனுலா வித்தியாலயத்தில்   கல்வி பயின்றுள்ள அவர், கடந்த சில காலமாக சமூக ஊடகங்களின் ஊடாக மாணவர்களுக்கு கற்பித்து வந்துள்ளார் எனவும்   02 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன்,  பெற்றோர் இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்கள் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்த  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More