Home இலங்கை வேலன் சுவாமி கைது

வேலன் சுவாமி கைது

by admin

காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது, காவல்துறையினரால் போடப்பட்டிருந்த    தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர்.

அதன் போது,காவல்துறையினர் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்வதற்கும்  காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More