Home இலங்கை ரீயூனியன் தீவிற்குள் நுழைய முயற்சித்த 38 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா்

ரீயூனியன் தீவிற்குள் நுழைய முயற்சித்த 38 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா்

by admin

சட்டவிரோதமாக   கடல் மார்க்கமாக பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முயற்சித்த 38 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.   கடந்த  டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள்   பின்னர் டிசம்பர்  13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம் – பத்தலகுண்டு தீவில் இருந்து 3 டிங்கி படகுகளில் 64 பேருடன் பிரித்தானியாவிற்கு சொந்தமான Diego Garcia தீவிற்குள் நுழைய முயன்றுள்ளனர்.

இந்த  நிலையில் டிசம்பர் 30 ஆம் திகதி   பிரித்தானிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அவா்கள் , மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  இதன் பின்னர்  பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ள குறித்த இலங்கையர்கள் , அங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  ரீ யூனியன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  நிிலையில் , அவர்களில் 38 பேர் தற்போது இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹாவை சேர்ந்தவர்கள் எனவும்  அவா்களில் இரண்டு பெண்களும் 18 வயதிற்கும் குறைந்த இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும்   உள்ளடங்குவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட வா்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி மற்றும் கண்டியை சேர்ந்த கடத்தல்காரர்களால் ஒருவரின் பயணத்திற்கு 04 இலட்சம் ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபா வரை அறவிடப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More