இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளானது. சுகோய்-30 நிராஜ்-2000 ரக விமானங்கள் மொரீனா என்ற பகுதியில் விழுந்து நொறுங்கின. குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டபோது விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது.
போர் விமானங்கள் விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இந்திய விமானபடைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
Spread the love
Add Comment