Home இலங்கை யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அடித்துக்கொலை!

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அடித்துக்கொலை!

by admin

யாழ்ப்பாணம் அத்தியடி   அத்தியடி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சுப்பிரமணியம் கலாநிதி  என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமது வீட்டுக்கு, வீட்டு வேலைகளை செய்வதற்கும், ஆடுகளுக்கு குழைகள் வெட்டவும் என ஒருவர் வருகின்றவர் எனவும், அவர் நேற்றைய தினமும் (12.02.23) வந்திருந்த போது அவரே தனது அம்மாவை அடித்து கொலை செய்தார் எனவும், அவரது மகள் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் தான் வீட்டுக்குள் இருந்ததாகவும், தனது அம்மா  அவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார் எனவும் பின்பு இருவரும் வாக்கு வாதப்படுவது கேட்டது, சிறிது நேரத்திற்குள் அம்மா பெரிய சத்தமாக கத்தினார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த போது , அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்நபரை அவ்விடத்தில் காணவில்லை என காவற்துறையினரிடம் ஆரம்ப கட்ட விசாரணையின் போது , கொலையானவரின் மகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாவும், சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்று உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், என யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More