
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையருகே சுமாா் 150 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 58போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
தகவல் அறிந்து மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலி கடலோர காவல்படையினா் மற்றும் காவல்துறையினா் 58போின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 80 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனா்.
கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீற்றர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Spread the love
Add Comment