Home உலகம் தனது 5 குழந்தைகளை கொலை  செய்த பெண் கருணைக்கொலை

தனது 5 குழந்தைகளை கொலை  செய்த பெண் கருணைக்கொலை

by admin

பெல்ஜியம் நாட்டை  ஜெனிவில் லெர்மிட் (வயது58)  எனும்  பெண்  தனது 5 குழந்தைகளை கொலை  செய்தமைக்காக கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.  . நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28-ந் திகதி   3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து  கொலை செய்திருந்தாா்.

. பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற  நிலையில் அவரை மீட்டு  மருத்துவமைனையில் சோ்க்கப்பட்டிருந்தாா்.   5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்த  அவர் 2019-ம் ஆண்டு மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி அவா்  கோரிக்கை விடுத்தார்.

பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. இந்தநிலையில்  ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்ததனையடுத்து அவா்   கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது வக்கீல் நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டதன் பின்னரே  கருணைக்கொலை செய்யப்பட்டார்’ என அவர்  தொிவித்துள்ளாா்.

 இவ்வழக்கின் விசாரணையின்போது, ஜெனிவில் லெர்மிட் மனநல மருத்துவரை  தவறாமல் சந்தித்து வந்தார் எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது எனவும் அவரது வக்கீல்கள் வாதிட்ட போதும்  ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More