Home இலங்கை வவுனியாவில் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

by admin

வவுனியா – மணியர்குளம் குளப்பகுதியில்   காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம்   காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா – பூவரசங்குளம், மணியர்குளம் குளப்பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம்   காணப்படுவதாக  பூவரசங்குளம் காவல்துறையினருக்கு நேற்றிரவு (09) வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன்,  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் என்ற 28 வயது  குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

குறித்த இளைஞனின் சடலத்தில் காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இது மதுபோதையில் இடம்பெற்ற  கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் வெலளியட்டுள்ள காவல்துறையினா்   சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  ஐந்து  பேரைக் கைதுசெய்துள்ளனர்.

அதேவேளை, குறித்த சடலத்தை பதில் நீதிபதி த.திருவருள்  மற்றும், சட்ட வைத்திய அதிகாரி  ஆகியோா்  சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More