வட கொரியா ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Intercontinental Ballistic Missile) யப்பானின் மேற்கு கரை கடலில் வீழ்ந்துள்ளது. . தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமர் இடையே முக்கியத்தும் வாய்ந்த கலந்துரையாடலொன்று நடைபெறவிருந்த நிலையில் வடகொரியா இந்த ஏவுகணையை ஏவியது.
இந்த நீண்ட தூர ஏவுகணை நேற்று முன்தினம்(14.03.23) காலை ஏவப்பட்டதை ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜப்பானின் மேற்குக் கடலில் வீழ்ந்துள்ளமையை அடுத்து மிண்டும் அரசியல் பதட்டம் ஏற்பட்டுள்து.
Spread the love
Add Comment