Home உலகம் சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு

by admin

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றுவதை   தொடர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.  அதன்படி போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு  எதிா்வரும் 26-ம் திகதி  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கராஜுவை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற இறுதிவரை போராட உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை அரசு மறுபரிசீலனை செய்து வந்ததனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More