Home உலகம்  இந்தோனேசியாவில்   படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி – 10 பேரைக் காணவில்லை

 இந்தோனேசியாவில்   படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி – 10 பேரைக் காணவில்லை

by admin

இந்தோனேசியாவில்   படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  11 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு  புறப்பட்ட பயணிகள் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில்  80-க்கும் மேற்பட்டோர்  பயணித்துக் கொண்டிருந்த நிலையில்  படகு புளாவ் புருங் என்ற இடத்தின் அருகிலுள்ள கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. . படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில்  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு    சென்ற மீட்புக் குழுவினர்  குழந்தைகள், பெண்கள்  உட்பட  58 பேரை மீட்டுள்ளனர்.

எனினும்  11 பேர் கடலில் மூழ்கி  உயிாிழந்துள்ளதுடன்  10 பேரைக் காணவில்லை எனத்தொிவிக்கப்பட்டுள்ளது. . எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், அதிகமானோரை ஏற்றிச் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டமை தெரிய வந்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More