Home இலங்கை முல்லைத்தீவைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

முல்லைத்தீவைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

by admin

இலங்கையில் இருந்து மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர். அவர்களை மீட்டு மெரைன் காவற்துறையினர் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்குள் அகதிகள் பிரவேசித்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் மெரைன் காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

தகவலின் பெயரில் மெரைன்  தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு சென்ற காவற்துறையினர் இலங்கை முல்லை தீவு தீர்த்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உள்ளிட்ட ஏழு பேரை  கைது செய்து   மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக   வாழ வழி இன்றி   நியூட்டன் வில்லியம், வனிதா, தோனி, ஜோன், விஷால், ஷாலினி, அதிஸ், ஆகிய ஏழு பேர் இலங்கையில் இருந்து   பணம் கொடுத்து   படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை அடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து கியூ பிரிவு காவற்துறையினர் மற்றும் மரைன் காவற்துறையினர்  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை இலங்கையில் இருந்து இன்று வருகை தந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 244 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More