Home உலகம் பிாித்தானிய  மன்னராக  3ம் சார்லஸ் இன்று முடி சூட்டிக்கொள்கின்றாா்.

பிாித்தானிய  மன்னராக  3ம் சார்லஸ் இன்று முடி சூட்டிக்கொள்கின்றாா்.

by admin

 

பிாித்தானிய  மன்னராக  3ம் சார்லஸ் இன்று முடி சூட்டிக்கொள்கின்றாா். பிாித்தானியாவை நீண்ட காலமாக  ஆட்சி செய்த  2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின் முடிசூட்டு விழா இன்று  6ம் திகதி  மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண் மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.  .  . இந்த விழாவில்   மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட் வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த சாரட் வண்டி நான்காம் வில்லியம் ஆட்சி நடந்த 1831-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1953-ம் ஆண்டு இந்த சாரட் வண்டியில்தான்   2-ம் எலிசபெத் மகாராணி  ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சாரட் வண்டி சுமார் 7 மீட்டர் நீளமும், 3 மீட்டர் உயரமும் கொண்டதுடன் 4 தொன் எடை கொண்ட   முற்றிலும் தங்க மூலாம் பூசப்பட்டதாகும். இந்த வண்டி தற்போது புதுப்பிக்கப்பட்டு புத்துயிர் பெற்றுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி இந்த சாரட் வண்டி இன்று பயன்படுத்தப்பட உள்ளது .

அலங்கரிக்கப்பட்ட 8 குதிரைகள் இதனை இழுத்துச்செல்லும். பாரம்பரியம் கொண்ட இந்த சாரட் வண்டியில் தான் இன்று மன்னர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் பக்கிம்காம் அரண்மனை தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

அத்துடன் இந்த  விழாவுக்காக  பிாித்தானிய மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டு பழமையான தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகி உள்ளது. விழாவின் போது பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோலை ஏந்தி கையில் தடியுடன் மன்னர் சார்லஸ் இந்த சிம்மாசனத்தில் அமருவார். அதன் பிறகு புனித எட்வர்டின் கிரீடம் அவரது தலையில் சூடப்படும். அதடதுடன இன்றே மன்னரின் மனைவி கமீலாவும்    ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

இந்த விழாவில்   உலக தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  பிாித்ானியாவைச்  சேர்ந்த தொண்டு நிறுவனம், சமூக குழுக்களை சேர்ந்த 850 பிரதிநிதிகள் உட்பட  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்

மேலும் விழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  காவல்துறையினா்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More