Home இலங்கை மட்டக்களப்பில் நீரில் மூழ்கி மாணவர்கள் இருவர் உயிாிழப்பு

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி மாணவர்கள் இருவர் உயிாிழப்பு

by admin

மட்டக்களப்பு கொக்குவில் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும்    குறித்த மாணவா்கள் நேற்று மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற   நிலையில்  இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16வயது)  எனவும் அவா்கள்  கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில்   கல்வி கற்கும்  மாணவர்கள்     கொக்குவில்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரண விசாரணையை தொடர்ந்து குறித்த மாணவா்களது உடல்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More