Home இலங்கை வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசாரி -ஆலய நிர்வாக உறுப்பினர் கைது

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசாரி -ஆலய நிர்வாக உறுப்பினர் கைது

by admin

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி   காவல்துறையினால்  இன்று(11)  கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் அவை  நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்   மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஆலயத்தில் பூசைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன் நேற்றயதினம் சங்காபிஷேக நிகழ்வும் இடம்பெற்றது. அதில் மழையினையும் பொருட்படுத்தாமல் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தநிலையில்  விசாரணை ஒன்றிற்காக ஆலய நிர்வாகத்தினரை  காவல்  நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி  காவல்துறையினரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்று காலை நெடுங்கேணி காவல்நிலையத்திற்கு சென்ற போது  அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினா் அவர்களை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று  வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More