Home இலங்கை நாவாந்துறையில் சிறுவர் கடத்தலில் ஈடுபட முயன்றவர் என பிடிக்கப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ??

நாவாந்துறையில் சிறுவர் கடத்தலில் ஈடுபட முயன்றவர் என பிடிக்கப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ??

by admin
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநிலை பாதிப்புக்கு உள்ளானர் என  காவல்துறை  விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை, சிறுவர்களை கடத்தும் நோக்குடன், அப்பகுதியில் நடமாடினார் என ஒரு நபரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தினர்.
காவல்துறையினரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை காவல்துறையினர்  காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் , அந்நபர் மனநிலை பாதிக்கப்படவர் என தெரியவந்துள்ளது.
அதேவேளை குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக வவுனியா காவல்  நிலையத்தில் அவரது குடும்பத்தினரால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களால் பிடிக்கப்பட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும், கடத்தல் முயற்சிகள் நடைபெற்றமையால், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More