Home இலங்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

by admin

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்குமாறும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் நோக்கி மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியருகில் 100 மீற்றர் தூரம் வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களை முன்னேறவிடாது தடுக்க காவல்துறையினரும் இராணுவத்தினரும் வீதித் தடைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்தவீதித் தடைகளை மீறி  எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த மாணவர்கள் மீதே காவல்துறையினா் இவ்வாறு   நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More