Home உலகம்கொலம்பியாவில் விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்  40 நாட்களின் பின் மீட்பு

கொலம்பியாவில் விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்  40 நாட்களின் பின் மீட்பு

by admin

 

கொலம்பியா நாட்டில்  விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்  40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.  கொலம்பியாவில்  கடந்த மே மாதம் 1-ந் திகதி  4 குழந்தைகள் உட்பட 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு ஒற்றை இயந்திரம்  கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று    விபத்துக்குள்ளானது.

விமானத்தில்  இயந்திரத்தில்  ஏற்பட்ட பழுது  காரணமாக  விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொருங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும், 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசன் வன பகுதியில் தீவிர தேடுதல்   நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

. இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தமை தெரிய வந்தது. ஆனால், சிறுவர்கள் 4 பேர் உயிருடன் இருந்து உள்ளனர். அவர்கள் தற்போது  மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர்   என  தொிவித்துள்ள கொலம்பியாவின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ. அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும் எனக் கூறியுள்ளார். விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை ஒன்றுறும் 4 வயது சிறுவன் ஒருவரும்  அடங்குவார்கள். அவர்களுக்கு   மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More