Home பிரதான செய்திகள் ஜோகோவிச்  3-வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளாா்.

ஜோகோவிச்  3-வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளாா்.

by admin

 

ஜோகோவிச்  3-வது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்  பட்டத்தை வென்றுள்ளாா்.     பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின்   ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று   நடைபெற்றது.

இதில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நோர்வே)  ஆகியோரும் போட்டியிட்ட நிலையில்    7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில்   ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளாா்.

இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்துள்ளாா்.

ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டங்களைப் பெற்று உள்ளனர். இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு   படைத்துள்ளாா்.

. சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச் இன்று முறியடித்துள்ளாா்.  காயம் காரணமாக நடால் இந்த போட்டியில்  விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More