360
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/06/14cd6da0-0f70-4821-9072-3b115742774f.jpg)
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினர்.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்து, எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/06/14cd6da0-0f70-4821-9072-3b115742774f.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/06/e3ccf144-0e9f-4929-8d80-522a78c815a3.jpg)
Spread the love