Home இலங்கை வட மாகாண வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே துடுப்பாட்டப் போட்டி!

வட மாகாண வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே துடுப்பாட்டப் போட்டி!

by admin

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது வருடமாக நாடாத்தப்படவுள்ள துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக, பெண் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே முதல் முதலாக வலைப்பந்தாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளது.

கடந்த வருடம் முதல் தடவையாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More