Home இலங்கை லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையிலான வைத்தியர்கள் சாதனை!

லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையிலான வைத்தியர்கள் சாதனை!

by admin

உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர், சிறுநீரக மருத்துவ நிபுணா், லெப்டினன்ட் கேணல் சுதர்ஷனின் தலைமையில் கேப்டன் (வைத்தியா்) டபிள்யூ.பி.எஸ்.சி. பதிரத்ன மற்றும் வைத்தியா் தமன்ஷா பிரேமதிலக்க ஆகியோரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேணல் (வைத்தியா்) யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் கேணல் (வைத்தியா்) சி.எஸ். அபேசிங்க ஆகியோர் இந்த அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து நிபுணர்களாக கடமையாற்றியுள்ளனர்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி இராணுவ வைத்தியர்களினால் சிறுநீரக கல் அகற்றப்பட்டதுடன், இந்த சிறுநீரக கல் 13.372 சென்றி மீற்றா் நீளமும் 801 கிராம் நிறையும் கொண்டது.

சத்திர சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பி.ஏ.சி. பெர்னாண்டோ, யு.எஸ்.பி மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் (வைத்தியா்) கே. சுதுர்ஷன் ஆகியோரால் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு காண்பிக்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான சிறுநீரக கல் 2004 இல் இந்தியாவில் அறுவை சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நீளம் 13 சென்றி மீற்றா் ஆகும்.

அதிகளவு நிறையுடன் கூடிய சிறுநீரக கல், 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் நிறை 620 கிராம் ஆகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More