Home இலங்கை இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சி அவசியம்!

இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சி அவசியம்!

by admin

இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சியான நடவடிக்கைகள் அவசியமானவை என அமெரி;க்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படும்போது முக்கியமான விடயங்களிற்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறுமாதங்களில் தாங்கள் பல்வேறு விடயங்களில் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ள திறைசேரி செயலாளர் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் நுண் பொருளாதாரத்திற்கும் ஸ்திரதன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தருணத்தில் முழுமையான கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு இன்னமும் அதிகளவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் இலங்கை போன்ற நாடுகளின்  அவசர சூழ்நிலைகள் குறித்து நாங்கள் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் -இலங்கை அதிகாரிகளின் சீர்திருத்த நடவடிக்கைகளை ஆதரவளிப்பதற்கு இந்தியா முன்முயற்சியான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More