Home இலங்கை பௌத்தஆலயங்கள் சிலவற்றின் மின் இணைப்பு துண்டிப்பு என்கிறார் ஒமல்பே!

பௌத்தஆலயங்கள் சிலவற்றின் மின் இணைப்பு துண்டிப்பு என்கிறார் ஒமல்பே!

by admin

மின்கட்டணங்களை செலுத்தாத பௌத்தஆலயங்களிற்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை,என தெரிவித்துள்ள அவர்சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்களை அரசாங்கம் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மின்கட்டணங்களை அதிகரித்துள்ளதால் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆலயங்களிற்கான மின்கட்டணங்கள் 555 வீதத்தினால் அதிகரித்தவேளை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆலயங்களிற்கு சூரியசக்தியில் இயங்கும் மின்கலங்களை வழங்குவதாக தெரிவித்திருந்ததுஆனால் இதுவரை அவ்வாறான எதுவும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அம்பாந்தோட்டையில் உள்ள பௌத்த ஆலயம் உட்பட் சில ஆலயங்களிற்கான மின்இணைப்பை இலங்கை மின்சாரசபை துண்டித்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More