Home இலங்கை வவுனியா விபத்தில் தாயும் மகளும் பலி

வவுனியா விபத்தில் தாயும் மகளும் பலி

by admin

 

வவுனியா – கன்னாட்டி பகுதியில் தனது மகள்களை பாடசாலைக்கு அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது ஒரு மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே   உயிாிழந்துள்ளனா்.   இன்று (16) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக  குறித்த தாயும் அவரது இரு  மகள்களும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்த போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக  வந்த  டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து   அவர்கள் மீது மோதி வித்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன்  . மற்றொரு 6 வயதான  மகள்  டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக   தொிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி (வயது 38), நிருபா (வயது 9)  ஆகியோரே  உயிாிழந்துள்ளனா்.

 

விபத்தினையடுத்து  டிப்பர் வாகனத்தில் பயணித்த  மூவாில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள்  துரத்திப்பிடித்து   காவல்துறையினாிடம் ஒப்படைத்துள்ளதுடன்  டிப்பர் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன், அதனை எரிப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறையினா்  நிலமையை கட்டுப்படுத்தியதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More