Home இலங்கை வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம்

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம்

by admin

 

இலங்கை கிாிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியின் நெதர்லாந்துக்கெதிரான போட்டியின் போது அவர் நடத்தைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போட்டியில் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு திரும்பும் போது வனிந்து ஹசரங்க தனது துடுப்பாட்ட மட்டையால் எல்லைக்கு அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு , இது நடத்தை விதிகளின் முதல் தர மீறல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு, தகுதிக்குறைவு மதிப்பெண் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வருடம் வனிந்து ஹசரங்க செய்த இரண்டாவது குற்றச்செயல் இது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More