Home இலங்கை யாழில். பெண் தலைமையிலான குழு , முதியவரை கடத்தி பணம் பறிப்பு

யாழில். பெண் தலைமையிலான குழு , முதியவரை கடத்தி பணம் பறிப்பு

by admin

 

தனக்கு தர வேண்டிய பணத்தினை தராத முதியவரை நான்கு ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் கடத்தி சென்று பணத்தினை பறித்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் கோப்பாய்  காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் செய்ய முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆள் கடத்தல் , வலுக்கட்டாயமாக பணம் பறித்தமை , தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் பெண்ணையும் அவருடன் இணைந்த மேலும் நான்கு ஆண்களையும், கைது செய்வதற்காக  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.  காணியை பெண்ணுக்கு விற்காத நிலையில் , கொடுத்த பணத்தினை , பெண் திருப்பி கேட்டுள்ளார் முதியவர் பணத்தினை கொடுக்காது காலத்தை இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில், பணம் கொடுத்த பெண் வாகனம் ஒன்றில் நான்கு ஆண்களுடன் முதியவரின் வீட்டுக்கு அருகில் சென்று முதியவரை வாகனத்தில் கடத்தி சென்று , தாக்கி ,  அவரிடமிருந்து 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் முதியவரை விடுவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து முதியவர் தன்னை கடத்தி பணம் பறித்தவர்கள் தொடர்பில் கோப்பாய்  காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More