Home இலங்கை யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றவர் உயிரிழப்பு

யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றவர் உயிரிழப்பு

by admin

 

இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றவர் ,  காவல்  நிலையத்தில் மயங்கி விழுந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஹரிச்சந்திரன் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண நகர மத்தி பகுதியில் ஓடுகள் விற்பனை செய்யும் கடையொன்றினை உயிரிழந்தவர் நடாத்தி வந்திருந்தார். அவரிடம் ஓடு வாங்கிய இளைஞன் ஒருவர் , மிகுதி பணத்தினை வழங்காது காலம் கடத்தி வந்துள்ளார்.  அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞனுக்கும் முதியவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில் , இளைஞன் முதியவரை தாக்கியுள்ளார்.
தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றவர் , காவல் நிலையத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
 உயிாிழந்தவாின்  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ,   உயிாிழந்தவரை தாக்கிய இளைஞனை  காவல்துறையினர் கைது செய்து ,  காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கடந்த வாரம் இளைஞர் ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க சென்ற மூதாட்டி ஒருவரும்  காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More