Home இலக்கியம் சில்லறைக்கு விற்ற சுயநிர்ணயம் – சி.ஜெயசங்கர்.

சில்லறைக்கு விற்ற சுயநிர்ணயம் – சி.ஜெயசங்கர்.

by admin

சில்லறைக்கு விற்ற சுயநிர்ணயம்

 

முதலைகளுக்கு ஒப்பிடப்படுபவர்

எவருக்கும் அஞ்சமாட்டார்

எவரையும் அஞ்சவைப்பார்

 

சட்டத்தைக் கயிறாக

திரிக்க வல்லார்

கரும்புச் சக்கையாகவும்

பிளிய வல்லார்

 

ஏற்றுவார்

ஏற்றினால்

எவர் சொன்னாலும்

இறக்க மாட்டார்

 

யார் அவர்? யாரவர்?

 

மா விலை

முட்டை விலை

மசகு எண்ணெய் விலை

எதற்கும் விலை வைப்பார்

வைத்தால் வைத்ததுதான்

எவர் சொன்னாலும்

கேளார் அவர்

 

யார் அவர்? யாரவர்?

 

முதலாளி

முதலாளி

முதலாளிதான் அவர்!

 

அரிசிக்கும் மாவுக்கும்

அய்யாயிரம் காசுக்கும்

சில்லறையில்

வாக்குகளை வாங்கியவர்

சொல்லுகிறார்

அவர்கள் கேட்கிறார்கள் இல்லையென்று

 

யார் இவர்? யாரிவர்?

 

அவர்கள்

கேட்கிறார்கள் இல்லையென்று

சொல்பவர் யார்? சொல்பவர் யார்?

 

யார் இவர்? யாரிவர்?

 

அரசியல்வாதி

அரசியல்வாதி

அமைச்சராகிய அரசியல்வாதி

 

“ஏற்றிய விலையை இறக்கிவிடு”

“எங்களின் சாவைத் தவிர்த்துவிடு”

கேட்பவர் குரலை நசிப்பவர் யார்?

தண்டிக்க சிறையில் அடைப்பவர் யார்?

 

அரிசியும் மாவும் அய்யாயிரம் காசும்

செய்கிற வேலையை சிந்தித்துப் பார்.

சி.ஜெயசங்கர்

 

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More