Home உலகம் 7 குழந்தைகள் கொலை – எஞ்சிய வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும்!

7 குழந்தைகள் கொலை – எஞ்சிய வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும்!

by admin

பிரித்தானியாவில் தொடராக இடம்பெற்ற குழந்தைகள் இறப்பில்,  தாதி லூசி லெட்பி மிகவும் கொடூரமான குற்றங்களை செய்திருப்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதால்  அவர் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்ர்.

பிரித்தானியாவில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக இறப்பு, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.

காவற்துறையினர்  நடத்திய விசாரணையில் அந்த மருத்துவமனையில் லூசி லெட்பி என்ற தாதி, சிசுக்கள் உயிரிழப்பு அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றியது தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்தது.

காவற்துறையினர்   தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டிலிருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து தாதி லூசி லெட்பி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நோய்வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் 7 குழந்தைகளை கொன்றதாகவும், 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் (20.08.23) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் நேற்று (21.08.23) நடைபெற்றது. இந்த வாதத்தின் நிறைவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பின் அடிப்படையில் , அவர் எஞ்சியுள்ள வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும். பிரித்தானியாவில் 70 வகையான குற்றங்களுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 3 பெண்களுக்கு மட்டுமே இத்தகைய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More