Home உலகம் சிறையில் சரணடைந்த டிரம்ப் பிணையில் விடுதலையாகி விமானத்தில் பயணமானார்!

சிறையில் சரணடைந்த டிரம்ப் பிணையில் விடுதலையாகி விமானத்தில் பயணமானார்!

by admin

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேப்படி நேரப்படி 24 ஆம் திகதி இரவு, 7 மணியளவில் ஜோர்ஜியா வழக்கு தொடர்பாக அட்லாண்டா சிறையில் சரணடைந்தார்.

பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை பதிவு செய்தனர்.

பரபரப்பான சுமார் 20 நிமிடங்களின் பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்ட அவர் , உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக இவர் மீது ஜோர்ஜியாக உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது.

இதில் ஜோர்ஜியா நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை தொடர்ச்து 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் டிரம்ப், வழக்கு தொடர்பான விடயங்களால் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் சரணடைந்து பிணை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் 25 ஆம் திகதிக்குள் டிரம்ப் சரணடைய வாய்ப்புள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், நான் சரணடையப் போகிறேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More