Home இலங்கை 15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள்

15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள்

by admin

 

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில்   சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில்,    காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,இயந்திரங்கள் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் உள்ள அரச காணியை இனம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை  காவல்துறையினா்   மற்றும் இராணுவத்தின் 541 வது படைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் மற்றும்  காவல்துறையினா்  அப்பகுதிக்குச் சென்றனர்.

இதன் போது ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும்  காவல்துறையினா்   கண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே கை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் காணியை துப்பரவு செய்ய பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களை      மீட்டுள்ள காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More