Home இந்தியா முருகன், நளினி உள்பட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

முருகன், நளினி உள்பட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

by admin

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்   முருகன், நளினி உள்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்ததிருந்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

குறித்த 4 பேரின்  கடவுச்சீட்டு  உள்ளிட்ட பயண ஆவணங்களைக் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும்   பயண ஆவணங்கள் கிடைத்தவுடன்  அவா்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More