Home உலகம் பாங்கொக் வணிக வளாக துப்பாக்கிச் சூடு – 14 வயது சிறுவன் கைது!

பாங்கொக் வணிக வளாக துப்பாக்கிச் சூடு – 14 வயது சிறுவன் கைது!

by admin

பாங்கொக் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையிளர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடைந்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உயிரிழந்த இருவரும் சீனா மற்றும் மியன்மார் பிரஜைகள் என தாய்லாந்து காவற்துறையிளர்  தெரிவித்துள்ளனர்.

குறித்த வணிக வளாகத்திற்கு அருகாமையிலுள்ள பாடசாலையொன்றில் குறித்த சிறுவன் கல்வி கற்பதாக காவற்துறையிளர் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More