Home இலங்கை மன்னாா் மற்றும் நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

மன்னாா் மற்றும் நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

by admin
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட படகுகளுடன் 15  இந்திய மீனவர்கள் இன்று (15) மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக மன்னார்  காவல்துறையினாிரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்களே நேற்றைய தினம் 2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கடற்படையின் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர்  மீனவர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  மன்னார்  காவல்துறையினர் விசார ணைகளின் பின்னர் நாளைய தினம் திங்கட்கிழமை (16) அனைத்து மீனவர்களும் மன்னார்  நீதவான்  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர்களால் 13 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  அதன் போது கடற்தொழிலாளர்களின் 03 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டுள்ள கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்படுத்திய போது 13 கடற்தொழிலாளர்களையும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More