Home இலங்கை மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

by admin

 

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில்  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மற்றும் முசலியில் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டது. எனினும்  நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 9.30 மணியளவில்   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள சென்ற  பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

-ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படாமை குறித்தும் குறிப்பாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான  காதர் மஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ள தோடு,  காதர் மஸ்தானின் கட்சி  சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அரசியல் நிகழ்வு போல் குறித்த  தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெறுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More