Home இலங்கை மாவீரர் வாரத்திற்கு தடை கோரல் – 20 ஆம் திகதி கட்டளை

மாவீரர் வாரத்திற்கு தடை கோரல் – 20 ஆம் திகதி கட்டளை

by admin
மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய்  காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் மானிப்பாய்  காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதவான் காயத்திரி சைலவன்  முன்னிலையில் நடைபெற்றது.
அதன்போது,  காவல்துறையினரின் விண்ணப்பத்தை நிராகரித்த எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணிகள், இறந்த உறவினர்களை நினைவு கூறுவது எவ்விதத்திலும் பயங்கரவாத செயலாகாது.

காவல்துறையினரின் செயற்பாடு கார்த்திகை விளக்கீட்டையும் பயங்கரவாதமாக சித்தரிக்கும். காவல்துறையினரின் கட்டளை வழங்கப்பட்டால் நவம்பர் 26ம் திகதி கார்த்திகை விளக்கீட்டை அனுஷ்டிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
கடந்த காலங்களில் இறந்தவர்களின் நினைவேந்தலை அரசாங்கங்கள்  அனுமதித்திருந்தது.  மேலும் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி மானிப்பாய்  காவல்துறையினரின் தடைக் கோரிக்கையை நிராகரிக்குமாறு
கோரினர்.

விசாரணைகளை அடுத்து விண்ணப்பம் தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எதிர்மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள்முன்னிலையாகினர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More