Home இலங்கை மோட்டார் சைக்கிள் –  பேருந்து மோதி விபத்து-இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் –  பேருந்து மோதி விபத்து-இரு இளைஞர்கள் உயிரிழப்பு

by admin
 
அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இன்று  (17) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன்  பேருந்து  வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயது  இளைஞர்   ஒருவா் ஸ்தலத்திலேயே  உயிரிழந்தார்.
 
  பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞனான 19 வயது மதிக்கத்தக்கவர்  சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து   வண்டி ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்  மோதி  விபத்துக்குள்ளானது.
 மோட்டார் சைக்கிள்  வேகமாக பயணித்த நிலையில் விபத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் விபத்தில் இறந்த இவ்விருவரும்  கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர்  காவல்துறையினப்  மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More