Home இலங்கை நெடுந்தீவுக்கு படகொன்றினை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை

நெடுந்தீவுக்கு படகொன்றினை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை

by admin

 

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய தூதுவர்  இன்றைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவுக்கான பயணத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார்.

இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத்தருமாறும் பிரதேச செயலாளர் கோரிக்கையினை முன்வைத்திருந்தார். இது தொடர்பான திட்ட வரைபினை தயாரித்து வழங்குமாறும் , அதனடிப்படையில் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இந்திய தூதுவர் வாக்குறுதியளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More