Home இலங்கை   மேலும் 7 பேர் தனுஷ்கோடியில் அகதியாக தஞ்சம்.

  மேலும் 7 பேர் தனுஷ்கோடியில் அகதியாக தஞ்சம்.

by admin

மன்னாரைச்  சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சோ்ந்த    ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1)   தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர். -மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பங்கள் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

படகு கட்டணமாக  இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன்   காவல்துறையினா்  அவா்களை  மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

-இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  தாங்கள் இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று  வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More