Home இலங்கை யாழில் பிரித்தானிய இளவரசி

யாழில் பிரித்தானிய இளவரசி

by admin
இலங்கைக்கு மூன்று நாள்  பயணம் மேற்கொண்டு  சென்றிருக்கும் பிரித் தானிய   இளவரசி ஆன்  மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை  சென்றுள்ளாா்.
யாழ்ப்பாணம்சென்ற இளவரசி உள்ளிட்ட குழுவினரை வடமாகாண ஆளுநர் வரவேற்றார். தொடர்ந்து யாழ்.பொது நூலகத்திற்கு சென்ற இளவரசி உள்ளிட்டவர்கள்  யாழ்.மாநகர சபை ஆணையாளர் , நூலகர் , நூலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றனர்.
இதேவேளை குறித்த நிகழ்வுக்கு செய்தி சேகரிப்புக்கு  ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தை  தளமாக கொண்டு இயங்கும் வலையொளி அலைவரிசை (YouTube Channel) வைத்திருபோர் உள்ளிட்ட நால்வருக்கு அனுமதி வழங்கப்பட்டது.  குறித்த விடயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More