Home இலங்கை இளவரசியின் யாழ். வருகையால் பொது நூலகத்திற்கு பூட்டு

இளவரசியின் யாழ். வருகையால் பொது நூலகத்திற்கு பூட்டு

by admin
பிரித்தானிய  இளவரசி  ஆன்  மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.
யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் ” விசேட காரணத்தினால் காலை 10. 30 மணிக்கு பூட்டப்பட்டு , பிற்பகல் 2 மணிக்கு மீள திறக்கப்படும்” என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.   இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்கு இன்றைய தினம்    சென்றிருந்தமையால் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நூலகம் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும் , அறிவித்தலில் ” விசேட காரணம்” என குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More