Home உலகம் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற குடியேறிகள் ஐவர் உறைப்பனியால் மரணம்!

பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற குடியேறிகள் ஐவர் உறைப்பனியால் மரணம்!

by admin

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக செல்ல முயன்ற 5 பேர் உறைப்பனி காலநிலை காரணமாக, உயிழந்துள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது

அத்துடன், மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உறைப்பனி காலநிலையினால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும், பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயன்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் விமேரெயுக்ஸ் நகரிலிருந்து சிறிய படகு ஒன்றில் பயணிக்க முற்பட்டபோது, அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.01.23) அதிகாலை 02.00 மணியளவில் பிரான்ஸின் பா-து-கலே பிராந்தியத்தில் (Pas-de-Calais) Wimereux என்ற கடற்கரைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் சட்ட விரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்து செல்லும் நோக்கில் படகு ஒன்றில் ஏறுவதற்காகக் குளிரில் உறைந்து காணப்பட்ட கடல் நீரில் இறங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. குடியேறிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. சிரியா அல்லது ஈராக்கியக் குடியேறிகளே உயிரிழந்தவர்கள் என்று ஒரு தகவல் தெரிவித்தது.

கடற்படைக் ஹெலிக்கொப்ரர் ஒன்று ஒளி பாய்ச்ச கடலில் சிக்கியோரைத் தேடி ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் முதலுதவி வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்தப் படகு அனர்த்தம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாகக் கரையோரப் காவற்துறைப்  பிரிவு தெரிவித்திருக்கிறது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More